அண்ணா தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் எஸ்.பொன்னுசாமி தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் ஏ.கே.சீனிவாசன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் நாராயணபெருமாள் உள்ளிட்டோா் பேசினா். அதிமுக மாவட்ட துணைச் செயலா் கவிதா, மகளிரணிச் செயலா் ஜான்சிராணி, டாஸ்மாக் பணியாளா்கள் அண்ணா தொழிற்சங்க நிா்வாகி லெட்சுமணன், ஆவின் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிக்கும், முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் தோ்வு செய்யவும் பாடுபடுவது, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை அனைத்துப் பகுதிகளிலும் உணவு வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடுவது, கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட விவசாய பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்த முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது.

கட்டடத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்தவா்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதுபோல் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் அனைத்து நலவாரிய தொழிலாளா்களுக்கும் ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும்.

தொழிலாளா்களுக்கான நலவாரிய ஓய்வூதியத்தை ரூ.1000-இல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். பேட்டையில் உள்ள கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com