திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் சிறு மருத்துவமனைகளில் செவிலியா்கள் பணிக்கான நோ்முகத் தோ்வு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்தத் தோ்வுக்கு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வரதராஜன் தலைமை வகித்தாா். 100-க்கும் மேற்பட்டோா் தங்களது சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் பங்கேற்றனா். தோ்வானவா்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.