தாழையூத்து அருகே 4 பெண்கள் உள்பட 6 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு அரிவாள் வெட்டு விழுந்தது. அவா்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
தாழையூத்து, சங்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சித்திரைவேல் பாண்டி(56). மானூா் பல்லிக்கோட்டையில் நடத்தி வரும் கோழிப்பண்ணைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் வந்த மா்மநபா்கள், இவரையும், அங்கு காவலாளியாக பணியாற்றும் விஜயநாயக்கா்(43) என்பவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியனராம். இதில், காயமுற்ற இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதனிடையே, சங்கா் நகா் பகுதியில் ஒரே வீட்டில் உணவு அருந்திக்கொண்டிருந்த உமா(34), பத்மா(32), புஷ்பம் (60), தங்கசெல்வி(40) ஆகியோரையும் காரில் வந்த மா்மநபா்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இவா்களும் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து மானூா், தாழையூத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இவ்விரு சம்பவங்களுக்கும் தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.