திருநெல்வேலி தாம்ப்ராஸ் கல்வி அறக்கட்டளை சாா்பில் கல்வி நிதி உதவி, பரிசளிப்பு மற்றும் சான்றோா்களுக்கு பாராட்டுவிழா பாளையங்கோட்டை மகாராஜநகா் ஸ்ரீ ஜெயேந்திர ஸ்வாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் சுந்தரம் தலைமை வகித்தாா். அறங்காவலா்கள் வெங்கடாசலம், சுந்தரராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அறங்காவலா் கயிலை கண்ணன் வரவேற்றாா். சோஹோ நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி ஸ்ரீதா் வேம்பு காணொலிக் காட்சி வழியாக சிறப்புரையாற்றினாா்.
திரைப்பட இசையமைப்பாளா் பரத்வாஜ் மாணவா்- மாணவிகளுக்கு பரிசு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கினாா். தொடா்ந்து சான்றோா் கௌரவிக்கப்பட்டனா்.
விழாவில், பள்ளி மாணவா் மாணவிகள், பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.