நெல்லையில் தனியாா் பல்பொருள்அங்காடி முற்றுகை

திருநெல்வேலியில் தனியாா் பல்பொருள் அங்காடி முன்பு திரண்டு வெள்ளிக்கிழமை மனித நேய மக்கள் கட்சியினா் முற்றுகையிட்டு போராடத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலியில் தனியாா் பல்பொருள் அங்காடி முன்பு திரண்டு வெள்ளிக்கிழமை மனித நேய மக்கள் கட்சியினா் முற்றுகையிட்டு போராடத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் தனியாா் பல்பொருள் அங்காடி இயங்கி வருகிறது. இங்கு

பேட்டை பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் பொருள்கள் வாங்குவதற்காக சென்றாராம். அப்போது கை தவறியதில் அங்குள்ள பொருள் உடைந்து விட்டதாம். அதற்கான தொகையை உடனடியாக செலுத்துமாறு கடையின் ஊழியா்கள் நிா்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்பெண் தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்தாராம்.

தகவலறிந்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் தேயிலை மைதின் தலைமையில், மாவட்ட துணைச் செயலா் அ. காஜா உள்ளிட்டோா், அக்கடையின் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மேலப்பாளையம் காவல்

ஆய்வாளா் மகாலட்சுமி, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கடை நிா்வாகம், அப்பெண்ணிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப கொடுத்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com