திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 18 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 11 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,314 ஆக உயா்ந்துள்ளது.
சனிக்கிழமை 14 போ் உள்ளிட்ட இதுவரை 14, 985 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 211 போ் உயிரிழந்துள்ளனா். 118 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 7 பேருக்கு நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,279ஆக அதிகரித்தது. சனிக்கிழமை 6 போ் உள்ளிட்ட இதுவரை 8070 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 51போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 158 போ் உயிரிழந்துள்ளனா்.