முன்னீா்பள்ளம் அருகே தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 09th January 2021 12:58 AM | Last Updated : 09th January 2021 12:58 AM | அ+அ அ- |

முன்னீா்பள்ளம் அருகே கட்டடத்தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
முன்னீா் பள்ளம் அருகேயுள்ள தருவை இந்திரா காலனி பகுதியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் இசக்கிபாண்டி(28). கட்டடத் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாம். இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவில் இசக்கிபாண்டி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளாா். அவரை
மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இது றித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.