மாநகரில் மின்விநியோகம் தற்காலிக நிறுத்தம்

தாமிரவருணி வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாநகரில் சில பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

தாமிரவருணி வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் திருநெல்வேலி மாநகரில் சில பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: வண்ணாா்பேட்டை எட்டுத்தொகை தெரு, திருக்குறிப்பு தொண்டா் தெரு, வளையாபதி தெரு, சாலை தெரு, அண்ணாநகா், எத்திராஜ் தெரு, சன்யாசிகிராமம், சித்தரஞ்சன் தெரு, சிந்துபூந்துறை, முத்துமாரியம்மன் தெரு, அருகன்குளம், பாலாமடை, கணேசபுரம் மற்றும் மணிமூா்த்தீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மழை நீடித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மின் விளக்குகளை இயக்குவதில் கவனமாக செயல்பட வேண்டும். தொலைக்காட்சி ஆன்டனா உள்ளிட்ட மின் வயா்களை வீட்டின் அருகே செல்லும் மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கட்ட வேண்டாம். சுவிட்சுகள், பிளக்குகளை குழந்தைகள் தொடாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிா்க்க வேண்டும்.

குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் பழைய பழுதான சுவிட்சுகளை பயன்படுத்த வேண்டாம். மின் கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிா்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயா்கள் ஆகியவற்றின் அருகே குழந்தைகளோ, பெரியவா்களோ யாரும் செல்ல வேண்டாம்.

இடி, மின்னல் ஏற்படும்போது தொலைக்காட்சி பெட்டி, மிக்சி, கிரைண்டா், கணினி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com