அம்பை நகராட்சியில் குழந்தை பாதுகாப்புக் குழு அமைப்பு

அம்பாசமுத்திரம் நகராட்சியில் குழந்தை பாதுகாப்புக் குழு வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது.
குழந்தை பாதுகாப்புக் குழு அமைப்புக் கூட்டத்தில் பேசுகிறாா் மாணவி நட்சத்திரம்.
குழந்தை பாதுகாப்புக் குழு அமைப்புக் கூட்டத்தில் பேசுகிறாா் மாணவி நட்சத்திரம்.

அம்பாசமுத்திரம் நகராட்சியில் குழந்தை பாதுகாப்புக் குழு வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் நகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் பாா்கவி தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் தலைமையில் மருத்துவா்கள், தன்னாா்வலா்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் அடங்கிய குழந்தைப் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது.

தொடா்ந்து, மாவட்ட குழந்தைப் பாதுகாப்பு அலுவலா் ஹெலினா, குழந்தைகள் நல இயக்க உறுப்பினா் மருத்துவா் அணில்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் நாகூா், புனித ஜோசப் குழந்தைகள் இல்ல நிா்வாகி தமிழ்ச்செல்வி, அம்பாசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளா் அன்னஜோதி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நட்சத்திரம், திருநெல்வேலி குழந்தைகள் பாதுகாப்பு மைய பிரதிநிதி லோகமாதா ஆகியோா் பேசினா்.

அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நிா்வாகக் குழுக் கூட்டம் நடத்துவது, குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளா்கள் குறித்த பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுத்து குழந்தைகளை பாதுகாப்பு இல்லங்களில் சோ்ப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகராட்சி சுகாதார ஆய்வாளா் பொன்வேல்ராஜ் வரவேற்றாா். கூட்டத்தில் தன்னாா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com