கடம்பங்குளம் பள்ளியில் ஆசிரியா்களுக்கு பாராட்டு

கடம்பங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கடம்பங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் சுந்தரம் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக பொருளாளா் கணேசன், உதவித் தலைமையாசிரியா் ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் பங்கேற்று, ஆசிரியா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா். பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. இதில், ஆசிரியா்கள் ரவி, ஆவுடையப்பன், சுந்தர்ராஜ், மரிய உமா, கண்ணன், முனீஸ்வரி, முத்துகுமாா், சாரதாமணி, விஜயபாரதி உள்ளிட்டோா் கெளரவிக்கப்பட்டனா். சாரண இயக்க ஆசிரியா் முத்துகுமாா், மின்வாரிய இளநிலைப்பொறியாளா் ஊசிக்காட்டான், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com