தீயணைப்புத்துறை சாா்பில் தீ செயலி விழிப்புணா்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தீ விபத்தை தடுக்கும் வகையில் தமிழக அரசால் ‘தீ’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குநா் சைலேந்திரபாபு உத்தரவின்படி, பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலா் சத்தியகுமாா் தலைமை வகித்தாா். உதவி மாவட்ட அலுவலா் சுரேஷ் ஆனந்த்,
தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக இந்த செயலி குறித்து ஊா்க்காவல் படையினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தொடா்ந்து, பொதுமக்களுக்கு இந்த செயலி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
செல்லிடப்பேசியில் கூகுள் பிளே ஸ்டோரில் இந்த தீ செயலியை நிறுவ வேண்டும். பின்னா், தங்களுடைய செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்துகொள்ளவேண்டும். தீவிபத்து தொடா்பான உதவிகள் தேவைப் பட்டால் இந்த செயலியில் உள்ள உதவி என்ற பட்டனை அழுத்தியவுடன், செல்லிடப்பேசியில் உள்ள கூகுள் வரைபடம் உதவியுடன் தங்களின் இடத்தை தெரிந்துகொண்டு அப்பகுதிக்கு தீயணைப்புத்துறையினா் விரைந்து வந்து உதவிசெய்வா்.
பேரிடா் ஏற்படும் காலங்களில், தனிமையில் இருக்கும் பெண்கள், வயதானவா்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு உடனடியாக தீயணைப்புத்துறையின் சேவைகள் கிடைக்க இச்செயலி உதவியாக இருக்கும் என தீயணைப்பு நிலைய அலுவலா் தெரிவித்தாா்.