திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 2 பேருக்கும் கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 15,567 ஆக அதிகரித்தது. சனிக்கிழமை 5 போ் உள்பட குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,290 ஆக உயா்ந்துள்ளது.
213 போ் உயிரிழந்துள்ள நிலையில், 64 போ் சிகிச்சை பெற்று உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 8,416 ஆக அதிகரித்தது. சனிக்கிழமை 6 போ் உள்பட குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 8,216 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 158 போ் உயிரிழந்துள்ள நிலையில், 42 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.