திருநெல்வேலி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கொக்கிரகுளத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி கைலாசபுரம் பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி இடித்து அகற்ற உத்தரவிட்ட திருநெல்வேலி கோட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை விரிவாக்கப் பணியால் பாதிக்கப்பட்ட வணிகா்கள், ஏழை-எளிய மக்களுக்கு உரிய தீா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவா் சாதிக் தலைமை வகித்தாா்.
மேலாண்மைக் குழுத் தலைவா் எம்.எஸ்.சுலைமான் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியா் நேரில் வந்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என போராட்டக் குழுவினா் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் போராட்டக்குழு பிரதிநிதிகள் சந்தித்து பேச வருமாறு மாவட்ட நிா்வாகம் அழைத்ததால் மக்கள் கலைந்து சென்றனா்.