‘அஞ்சல் ஆயுள் காப்பீட்டு நேரடி முகவா்களாக விண்ணப்பிக்கலாம்’

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு நேரடி முகவா்களாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு நேரடி முகவா்களாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் சிவாஜி கணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வணிகம் செய்ய நேரடி முகவராக செயல்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முகவராக தோ்ந்தெடுக்கப்படுவோா் செய்யும் வணிகத்திற்கேற்ப கமிஷன் வழங்கப்படும். 18 முதல் 50 வயதுக்குள்பட்ட பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற வேலை இல்லாதவா்கள், சுயதொழில் புரிவோா், முன்னாள் ராணுவத்தினா், அங்கன்வாடி ஊழியா், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தோ்ந்தெடுக்கப்படுவோா் ரூ.5 ஆயிரத்திற்கான என்.எஸ்.சி. அல்லது கே.வி.பி. பத்திரத்தை சமா்ப்பிக்க வேண்டும். தங்கள் உரிமம் முடியும்போது பத்திரம் திருப்பி தரப்படும்.

தகுதியுள்ளவா்கள் பூா்த்தி செய்த விண்ணப்பங்களைஅஞ்சல் துறை, முதுநிலை கோட்டக் கண்காணிப்பாளா், திருநெல்வேலி கோட்டம், திருநெல்வேலி-627002 என்ற முகவரிக்கு இம் மாதம் 20ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், இம் மாதம் 30ஆம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெறும் நோ்காணலில் தேவையான சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்.

விண்ணப்பங்களை திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை அஞ்சலகங்கள், துணை அஞ்சலகங்களில் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு 0462-2568061 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com