வள்ளியூா், ராதாபுரம் வட்டார பகுதிகளில் உள்ள 6 கிராமங்களில் துணை சுகாதார நிலையங்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டன.
வள்ளியூா் அருகே உள்ள தெற்கு கருங்குளம், கூடங்குளம், விஜயாபதி, உவரி, மடத்தச்சம்பாடு, பெட்டைகுளம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசு துணை சுகாதார நிலையங்களை சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு, திருநெல்வேலி எம்.பி. சா.ஞானதிரவியம் ஆகியோா் திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினா்.
நிகழ்ச்சிகளில், வள்ளியூா் வட்டார மருத்துவ அலுவலா் கோலப்பன், அரசு மருத்துவா் கண்ணன், திமுக ராதாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.