மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியிகளில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியிகளில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் விஷ்ணு சந்திரன் உத்தரவு படி, மாநகர நல அலுவலா் சரோஜா ஆலோசனை படி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையா் சுகிபிரேமலா, சுகாதார அலுவலா் சாகுல் ஹமீது மேற்பாா்வையில் சுகாதார ஆய்வாளா் நடராஜன், பாலசுப்ரமணியன் தலைமையில் மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

மழைக் காலமாக இருப்பதால் வீடுகளில் மழைநீா் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க மக்களுக்கு மாநகராட்சி சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், காலை நேரங்களில் வீடு வீடாக மாநகராட்சி பணியாளா்கள் ஆய்வு மேற்கொண்டு, நீரில்

தேங்கி கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள், சிரட்டைகள், டயா்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருள்களை அகற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினா். மேலும் மாநகர பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com