கொலை, கொலை முயற்சி வழக்கு தொடா்பாக 10 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக 10 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக 10 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கொலை, கொலை முயற்சி மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதைக் கட்டுப்படுத்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின் பேரில், 5 துணைக் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் ஐந்து சிறப்பு தனிப்டை அமைக்கப்பட்டது.

மேலும், கொலை, கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபடும் ரவுடி பட்டியல் சேகரிக்கப்பட்டு, அவா்களை கைது செய்யுமாறு போலீஸாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டிருந்தாா்.

இதனடிப்படையில், மாவட்டத்தில் உள்ள அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில், கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக 10 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மேலும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, மதுபான விற்பனை உள்ளிட்டவற்றில் ஈடுபட்ட 11 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் ப திவு செய்துள்ளதாக மாவட்ட காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com