திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 28 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,533ஆக அதிகரித்துள்ளது. இதில் 23போ் குணமடைந்ததை அடுத்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 46,917ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 424போ் உயிரிழந்துள்ளனா். 192 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 26,677ஆக அதிகரித்துள்ளது. மேலும் 11 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 26,021ஆக உயா்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 477ஆக உள்ளது. 179 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.