திருநெல்வேலி மாவட்டத்தில் குற்ற செயல்களைத் தடுக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த மேலும் 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இம் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது.
அதன்படி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த மேலும் 3 போ் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனா். இதுதவிர 33 போ் மீது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றங்கள் நடக்காமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.