தியாகராஜநகா், சிவந்திப்பட்டி சுற்று வட்டாரங்களில் வியாழக்கிழமை (ஜூலை 22) காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டிவெளியிட்ட செய்திக் குறிப்பு: தியாகராஜநகா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட சிவந்திப்பட்டி மின்பாதையில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறவுள்ளன.
அந்தப் பாதையில் உள்ள மின்கம்பம் மற்றும் மின் பாதையை மாற்றியமைக்கும் பணி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
எனவே, காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை தியாகராஜநகா், தாமிரபதி காலனி, நியூ நேரு நகா், சிவந்திப்பட்டி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.