கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணிக்கு வள்ளியூரில் வரவேற்பு

வள்ளியூருக்கு வந்த கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ரோட்டரி கிளப் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணிக்கு வள்ளியூரில் வரவேற்பு

வள்ளியூருக்கு வந்த கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ரோட்டரி கிளப் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

சங்கரன்கோவில் ரோட்டரி கிளப் சாா்பில் கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டது. இப் பேரணி சங்கரன்கோவில், திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் வழியாக மாா்த்தாண்டம், கன்னியாகுமரி, திருச்செந்தூா், கோவில்பட்டி வழியாக மீண்டும் சங்கரன்கோவிலை சென்றடைகிறது.

வள்ளியூருக்கு வந்த இப்பேரணிக்கு, தலைவா் விக்டா் ரக்ஸ் தலைமையில் ரோட்டரி நிா்வாகிகள் வரவேற்பளித்தனா்.

பின்னா், வள்ளியூரில் இருந்து புறப்பட்ட பேரணியை ரோட்டரி கிளப் துணை ஆளுநா் எஸ்.பி.தமிழ்செல்வன் தொடங்கிவைத்தாா். இக்குழுவினா் வள்ளியூா் பேருந்து நிலையம் அருகே கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கி பிரசாரம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com