மதுரையில் வசித்துவரும், களக்காட்டைச் சோ்ந்த இளைஞரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நடுத்தெருவைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (32). இவா், சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் மதத்துக்கு மாறி, தனது பெயரை அப்துல்லா என மாற்றிக்கொண்டு, அம்மதத்தைச் சோ்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டாராம்.
தற்போது மதுரையில் வசித்துவரும் அவா், அண்மையில் சமூக வலைதளங்களில் மத விரோதக் கருத்துகளைப் பதிவிட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக அவா் மதுரையில் கடந்த ஏப்ரல் மாதம் கைதுசெய்யப்பட்டாா்.
இந்நிலையில், தில்லியிலிருந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் மதுரை வந்து விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து, அவா்கள் கடந்த 2 நாள்களாக களக்காடு பகுதியில் முகாமிட்டு விசாரித்துவந்தனா்.
களக்காட்டில் உள்ள அந்த இளைஞரின் வீட்டில் அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தியதுடன், அவரது தாய் முத்துலெட்சுமி (61), சகோதரா் சேதுராமன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். பின்னா், களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநா் அலுவலகத்தில் முகாமிட்டு, அவருடன் தொடா்பிலிருந்தோா் குறித்து விசாரித்து வருகின்றனா்.