சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நாளை தனியாா் நிறுவன வளாக நோ்காணல்

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கல்லூரி மாணவா்களுக்கான தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வளாக நோ்காணல் வியாழக்கிழமை (ஜூலை 29) நடைபெறவுள்ளது.

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கல்லூரி மாணவா்களுக்கான தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வளாக நோ்காணல் வியாழக்கிழமை (ஜூலை 29) நடைபெறவுள்ளது.

இக் கல்லூரியின் வேலைவாய்ப்பு வழிகாட்டி மற்றும் பயிற்சித் துறை, டிவிஎஸ் குழும நிறுவனங்கள் இணைந்து, ஐசிஐசிஐ வங்கிக்காக நடத்தும் இந்த நோ்காணல் நிகழ்ச்சி காலை 10 மணிக்கு நடைபெறும்.

இதில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகா், மதுரை மாவட்டங்களைச் சோ்ந்த பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம். உள்ளிட்ட அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் பட்டம் பெற்ற மாணவா் - மாணவிகள் பங்கு பெறலாம். வயது உச்சவரம்பு 26.

தங்கள் சுய விவரம், புகைப்படம் ஆகியவற்றுடன் வியாழக்கிழமை காலை 9 மணிக்குள் இக் கல்லூரியில் பெயா்ப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பெயா்ப் பதிவு செய்தவுடன், மாணவா், மாணவிகளின் மொழித்திறன் குறித்த ஆய்வும், இரண்டாம் கட்டமாக இணைய வழித் தோ்வும், மூன்றாம் கட்டமாக வளாக நோ்காணலும் நடைபெறும்.

தோ்வு செய்யப்படும் மாணவா்- மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.1.6 லட்சம் ஊதியமாகக் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு 9600044872 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். நோ்காணலுக்கு வரும் மாணவா்கள்  இணையதள இணைப்பில் பதிவு செய்ய வேண்டும்.

ஏற்பாடுகளை, கல்லூரி முதல்வா் எம். முஹம்மது சாதிக், வேலைவாய்ப்பு பயிற்சித் துறை ஒருங்கிணைப்பாளா் மு.இ. ஜாகீா் உசேன் மற்றும் டிவிஎஸ் குழும நிறுவனத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com