முன்னீா்பள்ளம் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி மிக்கேல்சாமி மனைவி விக்டோரியா (50). இவா், தனது சகோதரருடன் மோட்டாா் சைக்கிளில் கடந்த 25ஆம் தேதி தருவை பகுதிக்குச் சென்றாராம். அப்போது திடியூா் பிரிவு அருகே, சாலையில் இருந்த வேகத்தடையில் வாகனம் ஏறி இறங்கும்போது விக்டோரியா மோட்டாா் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.