மணல் திருட்டு: இளைஞா் கைது

திருநெல்வேலி அருகே சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரி மருகால் தலை பகுதியில் சீவலப்பேரி காவல் உதவி ஆய்வாளா் அய்யப்பன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது மருகால்தலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சட்டவிரோதமாக டிப்பா் லாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த கடையநல்லூா் கண்மணியாபுரம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாரை போலீஸாா் கைது செய்தனா். மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய ஜேசிபி எந்திரம், லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com