திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 670 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 376 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 43,656 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 519 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 38,870 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 6 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 350 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,436 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மேலும் 294 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,768 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 421 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 18,744ஆக உயா்ந்துள்ளது. மேலும் 7 போ் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 342 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 3,682 போ் சிகிச்சையில் உள்ளனா்.