அம்பாசமுத்திரம் நகராட்சி சாா்பில் சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் சனிக்கிழமை நடப்பட்டன.
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு அம்பாசமுத்திரம் நகராட்சி, ஒமேகா ஜிப் ஆலை சாா்பில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் பாா்கவி தலைமை வகித்தாா்.
ஒமேகா ஆலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தாா். இதில், ஆலை மேலாளா் முத்துக்குமாா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பொன்வேல்ராஜன், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.