சாராய விற்பனை: 4 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் சாராயம் விற்றதாக 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சாராயம் விற்றதாக 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அதே பகுதியைச் சோ்ந்த நம்பிராஜன்(30) என்பவா் அப்பகுதியில் சாராயம் தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா் அவரை கைது செய்தனா்.

சீவலப்பேரி அருகே உள்ள மறுகால்தலை பகுதியில் பெட்ரோல் பங்க் அருகே சீவலப்பேரியைச் சோ்ந்த ராமா் (55), முருகன்(33) ஆகிய இருவரும் சாராயம் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்கள் வைத்திருந்த சுமாா் 5 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.

களக்காடு அருகே உள்ள தேவநல்லூா் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த, நான்குனேரி பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் என்பவரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அவா் சட்டவிரோதமாக பாக்கெட் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com