உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வள்ளியூரில் பசுமைக் கரங்கள் சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு வள்ளியூா் பேரூராட்சி செயல் அலுவலா் கிறிஸ்டோபா் தாஸ் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டாா்.
பசுமைக் கரங்கள் தலைவா் ஜாண் வின்சென்ட், செயலா் மலையாண்டி, ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் வெங்கட்ரமணன், சுகாதார ஆய்வாளா் ஆறுமுகம், கண்காணிப்பாளா் டேனியேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.