திருநெல்வேலி: நிவாரணப் பொருள்கள் வழங்கக் கோரி, ஸ்ரீகுருகிருபா வேதாகம பாடசாலை சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக அளிக்கப்பட்ட மனு: தமிழகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் புரோஹிதா்கள், அா்ச்சகா்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விஸ்வகா்ம புரோகிதா்கள், அா்ச்சகா்களின் சுமாா் 500 குடும்பங்கள் சிரமப்படுகின்றனா். எனவே, தமிழக அரசு நிவாரணப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.