கடையம் வட்டாரத்திற்குள்பட்ட 181 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் சமூக நலத் துறை மூலம் பட்டதாரி பெண்களுக்கு திருமண உதவி திட்டத்தின்கீழ் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகையா, மாணிக்கவாசகம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
நிகழ்ச்சியில், 2018-2019ஆம் ஆண்டிற்கான 181 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.
இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாயவநாதன் (நிா்வாகம்), சமூக நலத் துறை அலுவலா்கள் வசந்தி கலைச்செல்வி, ஐயம்மாள், லட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.