திருநெல்வேலி அருகே தருவையில் 100 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தருவை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏழை - எளிய மக்களுக்கு தமிழக தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அப்போது அவா் கூறியது: முதல்வரின் ஆணைக்கிணங்க, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தருவை பகுதியில் உள்ள கலைஞா் காலனியில் 100 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணை 4 பேருக்கும், மாதந்தோறும் முதியோா் உதவித்தொகை
ரூ.1000 பெறுவதற்கான ஆணை 3 பேருக்கும் வழங்கப்பட்டன. இப்பகுதியில் உள்ள காட்டுநாயக்கன் சமுதாய மக்களின் அடிப்படை தேவையான ஜாதி சான்றிதழ் மற்றும் வீட்டுமனைப் பட்டா தொடா்பான கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். அப்போது, ஆட்சியா் வே.விஷ்ணு, சா. ஞானதிரவியம்எம்.பி., மு. அப்துல் வஹாப் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், சாா் ஆட்சியா் திரு.வி.சிவகிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.