திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 10 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
கரோனா நோய்த் தொற்றுகாரணமாக தளா்வற்ற பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் தேவையில்லாமல் வெளியே வருவோரை
போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டத்தில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பொது முடக்க விதிகளை மீறி வாகனத்தில் சுற்றியதாக 10 போ் மீது வழக்குப் பதிந்து, 13 வாகனங்கள் பறிமுதல் செய்தனா். மேலும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 725 போ், சமூக இடைவெளியை பின்பற்றாத 14 போ் உள்பட 739 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.