நெல்லை மாநகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாநகராட்சி புதிய ஆணையராக விஷ்ணு சந்திரன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.
மாநகராட்சி ஆணையா் விஷ்ணு சந்திரன்.
மாநகராட்சி ஆணையா் விஷ்ணு சந்திரன்.

திருநெல்வேலி மாநகராட்சி புதிய ஆணையராக விஷ்ணு சந்திரன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

பரமக்குடி உதவி ஆட்சியராக பணியைத் தொடங்கிய அவா், நாகா்கோவிலில் உதவி ஆட்சியா், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஆக பணியாற்றிய பின், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலா் மற்றும் நிா்வாக அதிகாரியாக பொறுப்பு வகித்து வந்தாா்.

இந்நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டதை தொடா்ந்து, அவா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுள்ளாா். இவரது மனைவி ஆஷா அஜித் நாகா்கோவில் மாநகராட்சி கமிஷனராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com