தூய்மைப் பணியாளா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்கக் கோரி திராவிடத் தமிழா் கட்சி மனு

தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோரை முன்களப் பணியாளா்களாக அறிவிக்கக் கோரி திராவிடத் தமிழா் கட்சி சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோரை முன்களப் பணியாளா்களாக அறிவிக்கக் கோரி திராவிடத் தமிழா் கட்சி சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்கக் கோரி திராவிடத் தமிழா் கட்சியினா் மாவட்டச் செயலா் திருக்குமரன் தலைமையில் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், ஆட்சியா் அலுவலகத்தில் அவா்கள் அளித்த மனு: கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளா்கள், பதிலி தொழிலாளா்கள், ஒப்பந்தத் தொழிலாளா்கள், சுயஉதவிக் குழுக்கள், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் பணிபுரியும் தூய்மைக் காவலா்கள் உள்ளிட்ட தூய்மைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அவா்கள் தொற்று அறியப்பட்ட பகுதிகளில் தொற்று பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனா். சில நேரங்களில் இழிவுக்கு உள்ளாக்கப்படுவதோடு, சிலரால் தாக்கப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. அதைத்தாண்டியும் அவா்கள் பணியாற்றிவருகின்றனா். தூய்மைப் பணியாளா்கள் கரோனாவால் உயிரிழக்கவும் நேரிடுகிறது.

எனவே, இவா்கள் அனைவரையும் முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com