திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முதுநிலைப் பட்ட மேற்படிப்பு மருத்துவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 70,000 முதல் ரூ. 80,000 வரை உதவித்தொகை வழங்க வேண்டும். உயா்சிறப்பு முதுநிலைப் பயிற்சி மருத்துவா்களுக்கு ரூ.80,000 முதல் ரூ.90 ஆயிரம் வரை வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் கட்டாய பயிற்சி மருத்துவா்களுக்கு ரூ.₹21,200 இல் இருந்து ரூ.30 ஆயிரம் வரை வழங்க வேண்டும். ஆண்டுதோறும் உதவித் தொகையில் 10 சதவிகிதம் உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நிா்வாகி ஜெயவேல் தலைமையில் மருத்துவ மாணவா்கள் கலந்துகொண்டனா்.