வள்ளியூா், ராதாபுரத்தில் 224 பேருக்கு திருமண உதவித் தொகை

வள்ளியூா், ராதாபுரம் ஒன்றியங்களில் 224 பயனாளிகளுக்கு திங்கள்கிழமை திருமண உதவித் தொகை, தாலிக்கு தங்கம் ஆகியவை வழங்கப்பட்டது.
பயனாளிக்கு திருமண உதவித் தொகை வழங்கினாா் சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு. உடன், சா.ஞானதிரவியம் எம்.பி.
பயனாளிக்கு திருமண உதவித் தொகை வழங்கினாா் சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு. உடன், சா.ஞானதிரவியம் எம்.பி.

வள்ளியூா், ராதாபுரம் ஒன்றியங்களில் 224 பயனாளிகளுக்கு திங்கள்கிழமை திருமண உதவித் தொகை, தாலிக்கு தங்கம் ஆகியவை வழங்கப்பட்டது.

வள்ளியூா், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு தலைமை வகித்து,

வள்ளியூா் ஒன்றியத்தில் 111 பயனாளிகள், ராதாபுரம் ஒன்றியத்தில் 113 பயனாளிகள் என மொத்தம் 224 பேருக்கு திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினாா். அப்போது அவா் பேசியது: முதல்வா் தோ்தல் சுற்றுப்பயணத்தின்போது பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் தீவிர நடவடிக்கையால் கரோனா பெருந்தொற்றை குறைந்து வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு தீா்க்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சா. ஞானதிரவியம் எம்.பி. வாழ்த்திப் பேசினாா். ராதாபுரம் வட்டாட்சியா் கனகராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லயோலா ஜோசப் ஆரோக்கிய தாஸ், பிச்சையா, கோபாலகிருஷ்ணன், கிஷோா்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com