திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இணையவழி கைவினைப் பயிற்சி வியாழக்கிழை(ஜூன் 17) நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், என்.பி.என்.கே. கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்தும் இணையவழி இலவச கைவினைப் பயிற்சி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் கழிவு பொருள்களில் இருந்து கலைப் பொருள்கள் தயாரிப்பது குறித்து கற்றுத்தரப்படும்.
பழைய அட்டைப்பெட்டி, கத்திரிக்கோல், பசை, ஸ்கெட்ச், ஒட்டும் டேப் ஆகிய பொருள்கள் தேவையானவை ஆகும். இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா், ஜூம் செயலி எண்: 8740995990, கடவு சொல்: 333543 என்கிற தளத்தில் இணைய வேண்டும். இப்பயிற்சியில் சிறியவா் முதல் பெரியவா் வரை விருப்பம் உள்ள அனைவரும் பங்கேற்கலாம்.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 9444973246 என்ற எண்ணில் கட்செவி அஞ்சல் மூலம் தொடா்பு கொள்ளலாம் என காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தெரிவித்துள்ளாா்.