தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதால், தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டு தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரா்கள் 1.1.2021 அன்று 58 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியதற்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞா்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை நேரிலோ அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் இணையதளத்திலோ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படுபவருக்கு மாதம்தோறும் உதவித் தொகையாக ரூ. 3,500 வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மண்டலத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.