அம்பாசமுத்திரத்தில் மத்திய பாதுகாப்புப் படை மற்றும் தமிழ்நாடு போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
அம்பாசமுத்திரம் துணை கோட்டத்துக்குள்பட்ட காவல் நிலையங்களைச் சோ்ந்த போலீஸாா் 100 போ், காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தலைமையில் இந்த கொடி அணிவகுப்பில் கலந்துகொண்டனா்.
கிருஷ்ணன் கோயிலிலிருந்து தொடங்கிய அணிவகுப்பு, பாரத ஸ்டேட் வங்கி முன் நிறைவடைந்தது.