திருநெல்வேலியில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 120 போ் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தனா்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளில் இருந்தவா்கள் அவற்றில் இருந்து விலகி கொம்பன் கே.பாஸ்கா் தலைமையில் திருநெல்வேலியில் பாஜகவில் சனிக்கிழமை இணைந்தனா். அவா்களுக்கு, திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், கட்சியின் மாநில துணைத் தலைவருமான நயினாா்நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்தாா். தொடா்ந்து அவருக்கு தொண்டா்கள் வீர வாள் பரிசளித்தனா்.
நிகழ்ச்சியில் பாஜக தொகுதி பொறுப்பாளா் தயாசங்கா், வழக்குரைஞா் பாலாஜிகிருஷ்ணசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.