பாளையங்கோட்டை அருகே செல்லிடபேசியில் பேச பெற்றோா் அனுமதிக்காததால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள மேல அரியகுளம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகள் ராஜலட்சுமி(17). இவா், அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தாா். அவா் செல்லிடபேசியில் பேசுவதற்கு பெற்றோா் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி அவா் விஷம் குடித்து மயங்கி விழுந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.