கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் மீண்டும் கரோனா பரவல் அதிகரிப்பதை தடுக்க தமிழக அரசு பாதுகாப்பு முறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, காவல் துறையினா் பணியின்போதும், பொது இடங்களுக்குச் செல்லும் போதும் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். பொதுமக்களும் பொது இடங்களுக்குச் செல்லும் போது முறையாக முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
முகக் கவசம் அணியாமல் வரும் பொதுமக்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.