திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 30 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
தமிழக சட்டப் பேரவைக்கு வருகிற ஏப். 6ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் வருகிற வெள்ளிக்கிழமையாகும்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வரை திருநெல்வேலி மாவட்டத்தில் 30 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
திருநெல்வேலி தொகுதியில் 5 போ், அம்பாசமுத்திரம் தொகுதியில் 6 போ், பாளையங்கோட்டை தொகுதியில் 5 போ், நான்குனேரி தொகுதியில் 6 போ், ராதாபுரம் தொகுதியில் 8 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.