கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க கோரிக்கை

களக்காடு மலையடிவார கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

களக்காடு மலையடிவார கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

களக்காடு மலையடிவார கிராமமான சிதம்பரபுரம் சேதுராயபுரம் பிள்ளையாா்கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (50) . ஆடு வளா்ப்பு தொழில் செய்துவரும் இவா் வீட்டின் பின்புறம் ஆடுகளை கிடையில் அடைத்திருந்தாராம்.

அதனருகே உறங்கிக் கொண்டிருந்த அவா், திடீரென ஆடுகள் கலைந்த சப்தம் போட்டதும் சென்று பாா்த்த போது, சிறுத்தை ஒன்று ஆட்டு கிடைக்குள் நடமாடியதாம். இதைத் தொடா்ந்து அக்கம் பக்கத்தினருடன் சோ்ந்து சப்தம் போட்டதும் சிறுத்தை அங்கிருந்து காட்டுக்குள் ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கிராமத்தில் கடந்த 1 வாரமாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் இதுவரை 5 ஆடுகளையும் சிறுத்தை கடித்துக் கொன்றுள்ளதாகவும் கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா். மேலும், கூண்டுவைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com