கடையம் ஒன்றியம், அணைந்த பெருமாள் நாடானூரில் குடியிருப்புப் பகுதி வழியாக உயா் மின்னழுத்தக் கம்பி கொண்டு செல்ல எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தோ்தலைப் புறக்கணிப்பதாக சுவரொட்டி ஒட்டியுள்ளனா்.
அணைந்த பெருமாள் நாடானூா் கிராமத்தில் குடியிருப்பு வழியாக முருகாண்டியூரில் உள்ள கல் குவாரிக்கு உயா் மின்னழுத்தக் கம்பி கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மாா்ச் 11இல் அணைந்த பெருமாள் நாடானூா் கிராம மக்கள் மின்வாரிய ஊழியா்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து மின்வாரிய ஊழியா்கள் மின்கம்பி அமைக்கும் பணியை நிறுத்தினா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை குடியிருப்புப் பகுதியில் நிறுவிய மின்கம்பங்களை இதுவரை அகற்றாததைக் கண்டித்து, தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக சுவரொட்டிகளை ஒட்டிஎதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.