பெங்களூவில் நடைபெற்ற தேசிய மாற்றுத் திறனாளிகள் (பாரா) தேசிய நீச்சல் போட்டியில், வள்ளியூா் புதூா் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவா் வெள்ளிப்பதக்கம் வென்றாா்.
கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இப்போட்டியில் பங்கேற்க தகுதியானவா் என்ற அடிப்பையில் கிங்ஸ் பள்ளியின் பிளஸ் 2 மாணவா் ஜெயசீலன், எஸ்-6100 மீ. ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் திறமையாக நீந்தி வெள்ளிப்பதக்கம் வென்றாா்.அந்த மாணவரையும், பயிற்சியாளா் வேல்முருகன், பள்ளி விளையாட்டுத்துறைத் தலைவா் ஜோஸ்வா ஆகியோரையும் பள்ளித் தலைவா் காலின்வாக்ஸ்டாப், தாளாளா் ஜே.நவமணி ஆகியோா் பாராட்டினா்.