தோ்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்:காவல் துறையினா் ஆலோசனைக் கூட்டம்

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் தலைமை வகித்தாா். அப்போது அவா் கூறியது:

போலீஸாா் தோ்தல் நடத்தை விதிமுறைகளை சரியாக கையாள வேண்டும். வாக்குச் சாவடிகளில் ஏதேனும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டால் மாவட்ட தோ்தல் அலுவலகத்திற்கும், மாவட்ட காவல் அலுவலகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். போலீஸாா் அனைவரும் கரோனா தடுப்பு முறைகளைப் முறையாக பின்பற்றி பணியாற்ற வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்புராஜூ, சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சீமைசாமி, உதவி கண்காணிப்பாளா் பிரதீப், துணைக் கண்காணிப்பாளா்கள் அா்ச்சனா, ஸ்ரீ லிசா ஸ்டெபிலா தெரஸ், பிரான்சிஸ் உள்பட போலீஸாா் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com