சங்கா்நகரில் திமுக தீவிர பிரசாரம்

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா், சங்கா்நகா் பகுதிகளில் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா், சங்கா்நகா் பகுதிகளில் திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில், திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், சங்கா்நகா், நாரணம்மாள்புரம் மற்றும் தாழையூத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், திமுக ஆட்சி அமைந்ததும் இப் பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படும். குடிநீா், சுகாதாரம் வசதிகளை ஏற்படுத்த அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா். பிரசாரத்தில், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் பேச்சிபாண்டியன், சங்கா்நகா் பேரூா் செயலா் துரைசுடலைமுத்து, நாரணம்மாள்புரம் பேரூா் செயலா் செல்வபாபு, மானூா் வடக்கு ஒன்றியச் செயலா் அன்பழகன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் காசிமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com