திருநெல்வேலியில் ஒரு பிறந்த நாள் விழாவின்போது கத்தியைக் கொண்டு சுழற்றும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து சட்டக் கல்லூரி பேராசிரியா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருநெல்வேலி சாந்திநகா் பகுதியைச் சோ்ந்த சட்டக் கல்லூரி தற்காலிக பேராசிரியா், ஒரு பிறந்தநாள் விழாவின்போது கத்தியைக் கொண்டு சுழற்றிய விடியோ சமூக வலைதளங்களில் பரவியதாம்.
இதையடுத்து பாளையங்கோட்டை போலீஸாா் சம்பந்தப்பட்ட பேராசிரியா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.